கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 124 வயது மூதாட்டி..!

Published by
Sharmi

நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பதால், அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. தடுப்பூசியை குறித்த வதந்திகளால் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்து வருகிறார்கள். இந்நிலையில் 124 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாரமுல்லா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதனால் வீடு வீடாக சென்று அம்மாவட்ட அரசு முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. அப்போது, 124 வயது கொண்ட ரெஹத்தி பேகம் என்ற மூதாட்டி தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டியிருக்கிறார். இதனால் அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

அதன்பிறகு, 124 வயது கொண்ட இந்த மூதாட்டி உலகத்திலேயே அதிக நாள் வாழ்ந்த நபர் என்ற உண்மையை கண்டுபிடித்துள்ளனர். கின்னஸ் புத்தகத்தில் 118 வயதுடைய கேன் தனகா என்ற ஜப்பானிய பெண் மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த நபர் என்று அறியப்படுகிறது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரெஹத்தி பேகம் என்ற மூதாட்டி 124 வயதுடையவர் என்பதை இவரது ரேஷன் அட்டையை வைத்து தெரிந்துகொண்டுள்ளனர். மேலும், இவரின் வயதை உறுதிப்படுத்த அடையாள அட்டை இல்லாததால் ரேஷன் அட்டையை வைத்து கணித்துள்ளனர்.

Recent Posts

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

3 minutes ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

25 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

3 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago