18 வயது சிறுமியை கற்பழித்து விட்டு கொலை செய்த வழக்கு.! இளைஞர் கைது.!

Published by
Ragi

18 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கத்தியால் அறுத்து கொன்ற வழக்கில் தில்ஷாத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

உத்திரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 18 வயது சிறுமியின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். அதனையடுத்து நடந்த பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது யார் என்ற விசாரணையை போலீசார் நடத்தி வந்தனர். அப்போது, சிறுமி கடந்த சில மாதங்களாக அவரது மொபைலிருந்து தில்ஷாத் என்ற இளைஞனுடன் அடிக்கடி பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி ஆகஸ்ட் 24-ம் தேதி சந்தைக்கு சென்ற போது அவரை பின்தொடர்ந்து தில்ஷாத் பேச முயன்றதாகவும், சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிறுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஒப்பு கொண்டார். அதன் பின்னர் நடந்த வாக்குவாதத்தில் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் தொண்டையை அறுத்து கொன்றதையும் தில்ஷாத் ஒப்பு கொண்டார். குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின் படி, கொலைக்கு பயன்படுத்திய கத்தி கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் கைரேகைகள், இரத்த கறை படிந்த உடைகள் என அனைத்தும் குற்றவாளி தில்ஷான் என்பது உறுதியாகியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

5 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

6 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

8 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

8 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

9 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

10 hours ago