வாடகை வாகன ஓட்டிகளுக்கு 3.000 நிவாரண தொகை வழங்கப்படும் எனவும், அதற்காக ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே, பல மாநிலங்களில் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகைகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக அரசும் மக்களுக்கான உதவித்தொகை வழங்கி வருவதுடன், வாடகை வாகன ஓட்டிகளுக்கும் உதவித்தொகை வழங்க உள்ளதாகவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா காரணமாக வணிக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஆட்டோ, டாக்சி, மேக்சிகேப் ஓட்டுநர்களுக்கு 3000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த உதவித்தொகை பெறுவதற்கு http://sevasindhu.Karnataka.gov.in/இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மே 27-ஆம் தேதி முதல் பலர் இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பி வருவதாகவும், இந்த இணையதளத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், ஜூலை 15 மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்கள் பதிவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்டோ, டாக்ஸி மற்றும் மேக்சிகேப் வாகன ஓட்டுனர்களுக்கு கேட்டுக்கொள்வதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…