வாடகை வாகன ஓட்டிகளுக்கு 3,000 நிவாரண தொகை – கர்நாடக அரசு!

Published by
Rebekal

வாடகை வாகன ஓட்டிகளுக்கு 3.000 நிவாரண தொகை வழங்கப்படும் எனவும், அதற்காக ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே,  பல மாநிலங்களில் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகைகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக அரசும் மக்களுக்கான உதவித்தொகை வழங்கி வருவதுடன், வாடகை வாகன ஓட்டிகளுக்கும் உதவித்தொகை வழங்க உள்ளதாகவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா காரணமாக வணிக நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஆட்டோ, டாக்சி, மேக்சிகேப் ஓட்டுநர்களுக்கு 3000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த உதவித்தொகை பெறுவதற்கு http://sevasindhu.Karnataka.gov.in/இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே 27-ஆம் தேதி முதல் பலர் இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பி வருவதாகவும், இந்த இணையதளத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், ஜூலை 15 மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்கள் பதிவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்டோ, டாக்ஸி மற்றும் மேக்சிகேப் வாகன ஓட்டுனர்களுக்கு கேட்டுக்கொள்வதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

7 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

7 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

8 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

8 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

10 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

11 hours ago