அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 35,000 ஊழியர்களை நீக்கப்போவதாக HSBC வங்கி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது. ஆனால், அந்த முடிவை தற்போது வங்கி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் தீவிரமடைவதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதமே எச்.எஸ்.பி.சி வங்கியானது, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 35,000 ஊழியர்களை நீக்கப்போவதாகவும், இந்த நடவடிக்கை படிப்படியாக நடைபெறும் எனவும் கூறப்பட்டது. இந்த செய்தி வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், பல நிறுவனங்கள் முடங்கி போய் உள்ளதால், தற்போது பணி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் HSBC வங்கி ஊழியர்கள் வேலையின்றி தவிப்பார்கள். எனவே, தங்கள் வங்கி ஊழியர்கள் வேலை தேடி தவிக்கும் நிலையை விரும்பவில்லை என கூறி இந்த பணி நீக்க நடவடிக்கையை தற்போது நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
ஆனால், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வருவாய் பாதியாக குறைந்துள்ளது எனவும் அந்த வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…