இந்தியாவில் 4,01,078 பேருக்கு தொற்று உறுதி….! 4,187 பேர் உயிரிழப்பு…..!

Published by
லீனா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 4,01,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 4,01,078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். 3,18,609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,18,92,676  ஆகவும்,குணமடைந்தோர் எண்ணிக்கை 1,79,30,960 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,38,270 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 54,000 பேருக்கும், கர்நாடகாவில் 49,000 பேருக்கும், கேரளாவில் 38,000 பேருக்கும் தொற்றுகள் பதிவாகியுள்ளது.  தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மே 10-ஆம் தேதி முதல் மே – 14ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது.

மேலும் அதன் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 12 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு காணப்படுகிறது என்றும், ஏழு மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை  கொரோனா தொற்று காணப்படுவதாக கூறப்படுகிறது. பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக விஜயராகவன் அவர்கள் மூன்றாவது கொரோனா வைரஸ் அலையை தவிர்க்க முடியாது என்று அவர் கூறியுள்ள நிலையில், வலுவான நடவடிக்கைகளை எடுத்தால் அதை தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

2 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

3 hours ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

4 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

5 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago