டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் எஸ்.எச்.ஓவை கத்தியால் குத்தியவர் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகிறது. அகிம்சை முறையில் நடைபெற்று வந்த போராட்டம் கடந்த இரு தினங்களாக வன்முறையாக வெடித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் போராட்டம் நேற்று முன்தினம் பயங்கரமாக வெடித்தது. இதனை எடுத்து பிரச்சினையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் அங்கு சென்று தடியடி நடத்தினர்.
இதில் காவல்துறை அதிகாரி ஒருவரை ரஞ்சித் சிங் என்னும் 22 வயதுடைய விவசாயி ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். தற்பொழுது போலீசாரை கத்தியால் குத்தியவர் உட்பட 44 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…