இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு 5000 ரூபாய் நிதி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

Published by
Rebekal

கொரோனாவால் ஊரடங்கு விதிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உள்ள ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு 5,000 ரூபாய் நிதி வழங்கப்படும் எனவும், இரண்டு மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தீவிரம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் ஒருபுறமிருக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்பட்டு கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தலா 5,000 ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர்கள் நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஒரு சிறிய உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர், மேலும் இரண்டு மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அரசு உதவுவதோடு மட்டுமல்லாமல் அருகில் உள்ள மக்கள் அத்தியாவசிய உதவிகள் இன்றி பிறர் இருக்கும் பொழுது தேவைப்படுபவர்களுக்கு முன்வந்து உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

2 minutes ago

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

27 minutes ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

1 hour ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

1 hour ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

2 hours ago

“போரை தொடங்கிடீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்”…அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…

2 hours ago