தங்கம் கடத்தல் வழக்கில் அமைச்சர் கே.டி.ஜலீலிடம் 6 மணி நேரம் விசாரணை..!

Published by
murugan

உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீலிடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி துபாயில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்தது. முக்கிய நபர்களான ஸ்வப்னா சுரேஷ், சரித் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி உடன் உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரை அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து நேற்று கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

நேற்று அமலாக்கத்துறை அலுவலத்தில் உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் ஆஜரான சில மணிநேரங்களுக்கு பின்னர் காங்கிரஸ் மற்றும் பாஜக  தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர் கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமைச்சர் கே.டி.ஜலீலை மீண்டும் அமலாக்க இயக்குநரகம் விசாரிக்க வாய்ப்புள்ளது. நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் முழுமையாக திருப்தி அடையவில்லை என்று அமலாக்கத்துறை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published by
murugan

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago