நாடு முழுதும் பதிவாகும் கொரோனா வழக்குகளில் 68% கேரளாவை சேர்ந்தது என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தற்போதும் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், கேரள மாநிலத்தில் அதிக அளவில் தற்போது கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் தற்போது கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள், நாடு முழுவதும் பதிவாக கூடிய மொத்த வழக்குகளில் கிட்டத்தட்ட 68% கேரளாவை சேர்ந்தது தான் என கூறியுள்ளார்.
மேலும், மற்ற மாநிலங்களான மிசோராம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வாராந்திர கொரோனா பாதிப்பு வீதம் தற்பொழுது 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளதாகவும், இன்னும் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் கொரோனா 5% அதிகரித்து வருவதாகவும், இந்த பகுதிகளில் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் முறையான தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…