மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் கேமில் ரூ.40,000-ஐ இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன்.
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் மொபைல் போன் உள்ளது. இதனை சிலர் நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தினாலும், சிலர், அதனை தீய வழிகளிலும் பயன்படுத்துகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில், 6-ம் வகுப்பு பயின்று வரும் நோயியல் ஆய்வக உரிமையாளரின் மகன், இவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதோடுகூட தற்கொலை குறிப்பை வைத்து விட்டு சென்றுள்ளார்.
அந்த குறிப்பில் தன் தாயிடம் மன்னிப்பு கோரி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாகவும், வங்கி கணக்கில் இருந்து ரூ 40,000 பணத்தை எடுத்ததாகவும், ஃப்ரீ பையர் விளையாட்டில் மூலம் பணத்தை வீணடித்ததாகவும் குறிப்பிட்டு தனது தாயாரை அழ வேண்டாம் என்றும் அந்த குறிப்பில் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், சிறுவனின் தந்தையும் தாயும் வீட்டில் இல்லாத நேரம் தான் , இந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் தாயார் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது அறிந்து தொலைபேசிக்கு வந்த தகவலின்படி அவரது மகனை திட்டியதாகவும், இதனையடுத்து, சிறுவன் அவரது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
உள்ளே சென்று சில மணி நேரங்கள் கழித்தும் அவர் வெளியே வராததால், அவரது சகோதரி பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின் அறையின் கதவை உடைத்து உள்ளே போன போது, சிறுவன் தாவாணியை பயன்படுத்தி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. சிறுவரின் இந்த செயல் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…