இந்தியாவில் 70 பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் – மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர்!

Published by
Rebekal

இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸால் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி வருவதுடன், இந்தியாவிலும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மக்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

அதில், இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்படக்கூடிய மரபணு மாறுபாடுகளைக் கண்டறியும் பணியில் நாட்டில் 28 ஆய்வகங்கள்  ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வகங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58,240 பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதில் 46,124 மாதிரி பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும், அதில் டெல்டா வகை வைரஸ் 17,168 மாதிரிகளில் இருந்ததாகவும், ஆல்பா வகை 4,172 மாதிரிகளில் இருந்தது கண்டறியப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், 217 மாதிரிகளில் பீட்டா வகையும், ஒரு காமா வகையும் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், கடந்த ஜூலை 23-ஆம் தேதி வரை இந்தியாவில் 70 பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது எனவும், அதில் அதிக பட்சமாக மகாராஷ்டிராவில் தான் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய பிரதேசத்தில் 11 பேரும் தமிழகத்தில் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

3 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

4 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

4 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

5 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

5 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

6 hours ago