கர்நாடகாவில் கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம் விதித்த அர்ச்சகர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் குல்பர்கா எனும் மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி எனும் நகரை சேர்ந்தவர் தான் 24 வயதுடைய கங்காதர். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கடந்த 14ஆம் தேதி இவர் கரடகி கிராமத்திலுள்ள மகாலட்சுமி கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜை செய்துள்ளார்.
பூஜை முடிந்து அவர் வெளியே வந்ததும் அவரை பார்த்த கோவில் அர்ச்சகர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஊர் பெரியவர்கள் சிலர் ஊர் பஞ்சாயத்தை கூட்டி உள்ளனர். அதன் பின்பு இவர் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் கோவிலுக்குள் நுழைந்து பூஜை செய்ததற்காக 11,000 அபராதமாக கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர், அத்தனையும் கங்காதர் கடந்த 20 ஆம் தேதி கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கோவிலுக்கு நுழைந்ததற்கு 5 லட்சம் அபராதமாக ஓரு மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் எனவும் பஞ்சாயத்தார் எழுதி வாங்கியுள்ளனர். இதுகுறித்து குல்பர்கா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த போலீசார் கோவில் அர்ச்சகர் உட்பட 8 பேர் மீது எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 504, 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…