காங்கிரஸின் மூத்த தலைவரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் ஆகிய சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் புனேவில் காலமானார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஓராண்டு காலம் முதலமைச்சராக இருந்தவர் தான் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர். இவர் அண்மையில் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின்பு அவர் குணமடைந்து தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்ததாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவால் 89 வயதான சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் காலமாகியுள்ளார்.
இவரது மறைவுக்கு மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமாகிய சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் அவர்களின் மறைவு குறித்து தெரிந்து கொண்டேன். அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மகாராஷ்டிராவின் அரசியலில் உறுதியான தன்மை கொண்டவர் என இவரைப் புகழ்ந்து தனது அஞ்சலியையும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…