ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி.! பிரதமர் மோடி இரங்கல்.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என நாகர்கர்னூல் மாவட்ட ஆட்சியர் எல் ஷர்மன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. குறைந்தது 17 பேர் ஆலைக்குள் இருந்தனர். பின்னர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

  சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களும் மீட்புப் பணிகளில் சேர்ந்துள்ளதாகவும், ஐந்து தீயணைப்பு இயந்திரங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  சுரங்கப்பாதையில் இருந்து இன்னும் புகை வெளியே வருகிறது, அதன் தீவிரத்தை குறைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தெலுங்கானா-ஆந்திர மாநில எல்லையில் நிலத்தடியில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் இடது கரை நீர்மின் நிலையத்தில் 9 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தீ அணைக்கப்பட்டாலும், புகை காரணமாக மின் நிலையம் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் மூழ்கி, மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்தது. இதனால் 6 பேர் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன்தான் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

1 hour ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

2 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

2 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago