கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிரா ,கர்நாடக , குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் மழை பெய்து வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.கேரளா மாநிலத்திலும் கன மழை பெய்து வருகிறது.இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
பல பள்ளி , கல்லுரிகளுக்கு விடுமுறையும் கொடுக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ள பிரமானல் கிராமத்தில் இன்று மீட்பு பணி நடந்தது.வெள்ளத்தில் மீட்பதற்காக பஞ்சாயத்து படகு ஓன்று உள்ளது.
இப்படகில் இரண்டு முறை அக்கிராம மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வந்தனர்.ஆனால் 20 பேர் செல்லக்கூடிய அப்படகில் மூன்றாவது முறையாக 30 பேர் சென்றனர்.இதனால் திடீர்ரென படகு கவிழ்ந்தது.
இதில் 7 பெண்கள் உட்பட 9 பேர் இறந்தனர்.மேலும் 16 பேர் காணவில்லை மற்றவர்கள் பத்திரமாக நீந்தி வந்து உள்ளனர்.இதை தொடர்ந்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த மீட்பு குழுவினர் 20 படகு மூலம் மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…