மூளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 9 வயது சிறுமி! அறுவை சிகிச்சையின் போது சிறுமி என்ன செய்துள்ளார் தெரியுமா?

Published by
லீனா

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த 9 வயது சிறுமி சௌமியா, மூளை அறுவை சிகிச்சையின் போது, 6 மணி நேரம் பியானோ வாசித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த 9 வயது சிறுமி சௌமியா, மூளை அறுவை சிகிச்சைக்காக, பிர்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது மூளையில் உள்ள ஒரு கட்டியை அகற்றுவதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் அறுவை சிகிச்சைக்குப்பின் தான் நலமுடன் உள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் குறைந்தது 6 மணி நேரம் பியானோ வாசித்தேன். மொபைல் விளையாடினேன். இப்பொழுது நன்றாக உணர்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

இவரது அறுவை சிகிச்சை குறித்து, மருத்துவர்கள் கூறுகையில், மூளையின் மற்ற நரம்புகளுக்குச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவருக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்வது கடினம் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே அவரது அறுவை சிகிச்சை ‘Awake Craniotomy’ முறையில் செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பின் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர் அபிஷேக் சவுகான் கூறுகையில், இந்த அறுவை சிகிச்சை சவாலானது தான். ஆனால் எங்கள் அணியின் முயற்சியால், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. நாங்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது, நாங்கள் அவளிடம் பியானோ வாசிக்கச் சொன்னோம். அறுவை சிகிச்சை முடியும் வரை அவள் சுயநினைவுடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

8 minutes ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

43 minutes ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

1 hour ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

1 hour ago

“போரை தொடங்கிடீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்”…அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…

1 hour ago

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago