viral video [file image]
சூரத் : பாலில் உள்ள ஸ்ரீபாத் செலிப்ரேஷன்ஸ் பகுதியில் 7-வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத்தின் பாலில் பகுதியில் பெரிய கட்டடம் ஒன்று இருக்கிறது. இந்த கட்டடத்தின் 7-வது மாடியில் இருந்து இரண்டு வயது சிறுவன் விளையாடி கொண்டு இருந்த போது கீழே விழுந்து உயிரிழந்தான். உயிரிழந்த அந்த சிறுவன் பவ்யா கல்சாரியா என்று தெரிய வந்துள்ளது.
குழந்தையின் தாய் மற்றும் அத்தை வீட்டைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, 7-வது மாடியில் பவ்யா கல்சாரியா விளையாடி கொண்டு இருந்த நிலையில், இரும்புக் குழாய் வழியாக கிரில்லில் உட்கார முயன்றார். அப்போது, திடீரென சமநிலை இழந்து கீழே விழுந்தார். கிரில் சற்று இடைவெளியாக இருந்த காரணத்தால் குழந்தையின் உடல் சுலபமாக நுழைந்துவிட்டது.
கீழே விழுந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் பவ்யா கல்சாரியாவை மருத்துவனைக்கு கொண்டு சென்ற நிலையில், உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் கிரில்களின் சரியான மறுவடிவமைப்பு உறுதி செய்யுமாறு சங்கத் தலைவருக்கு நோட்டீஸ் வழங்கினர்.
7-வது மாடியில் இருந்து குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…