இந்தியா

LIVE: ஒடிசா விபத்து…தமிழர்களில் 3 பேர் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்!!

Published by
பால முருகன்

தமிழர்களின் நிலை 

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழர்களில், 8 பேரின் நிலை இதுவரை தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அதில் 3 பேர் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,சென்னையை சேர்ந்த ஜெகதீசன் கோவையை சேர்ந்த நாரகணி கோபி ஆகிய இருவரும் வீடு திரும்பினர் என்றும், கமல் என்பவர் ரயிலில் பயணிக்கவில்லை எனவும் மீதமுள்ள 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.6.2023 – 5.00PM

நிவாரண தொகை அறிவித்த ஆந்திர முதலமைச்சர்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் எனவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 5 லட்சம் மற்றும் சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு 71 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும்  ஆந்திர  முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

4.6.2023 – 4.00PM

இலவச பேருந்து சேவை

ஒடிசா ரயில் விபத்து காரணமாக கட்டாக், பூரி, புவனேஸ்வரில் இருந்து கொல்கத்தாவுக்கு இலவச பேருந்து சேவையை என முதலமைச்சர் நவீன் பட்நாயக் தற்போது அறிவித்துள்ளார். 

4.6.2023 – 3.45PM

ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

4.6.2023 – 3.15PM

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு 

வெப்ப சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம்; ஓரிரு இடங்களில் இயல்பில் 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.

4.6.2023 – 2.29 PM

5 லட்சம் நிவாரணம்

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சமும்,  காயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும் வழங்கப்படும் என்றும்,உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து 

டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் உள்ள குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 11-12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக டெல்லி தீயணைப்பு சேவைகள் உதவி பிரிவு அதிகாரி ஆர்.கே.சின்ஹா தெரிவித்தார். அப்பகுதியில் குப்பைகள் கிடக்கும் திறந்தவெளிப் பகுதியில் தீ பரவத் தொடங்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4.6.2023

 

 

Published by
பால முருகன்

Recent Posts

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

17 minutes ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

50 minutes ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

1 hour ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

1 hour ago

கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

3 hours ago