கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வருகிற ஜூலை 24, 25 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும், கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளது. நேற்று ஒரே நாளில் கேரளாவில் 17,481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று 105 பேர் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கேரள அரசு தொற்றை கட்டுப்படுத்த வருகிற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேரிடர் மேலாண்மை சட்டப்படி, நோய்த்தொற்றை கட்டுப்படுத்த வருகிற ஜூலை 23 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை முகாம்கள் மூலமாக 3 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…