அசாம் தேயிலை தோட்டங்களில் பயிராகும் அரியவகை தேயிலை தான் மனோகரி கோல்ட். இந்த மனோகரி கோல்ட் தேயிலை இலைகள் தங்க நிறத்தில் இருப்பதால் இந்த தேயிலைக்கு தனி மவுசு உள்ளது.
இந்த தேயிலை நல்ல விளைச்சல் ஆகுவதற்கு சீதோஷ்ண நிலை வேண்டும். ஆனால் இந்த வருடம் சீதோஷ்ண நிலை இல்லாததால் மனோகரி கோல்ட் தேயிலை குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தேயிலை சிறிய மொட்டிகளில் இருந்து பெறப்படுவதால் இதை தயாரிப்பதில் சற்று கடினம்.இந்நிலையில் இந்த மனோகரி கோல்ட் தேயிலை ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50,000 வரை ஏலம் போனது.கடந்த ஆண்டு மனோகரி கோல்ட் தேயிலை ஒரு கிலோ ரூ.40,000 வரை ஏலம் சென்றது.
பொது ஏலத்தில் மனோகரி கோல்ட் தேயிலை ஒரு கிலோ ரூ.50,000 சென்றது இதுவே முதல் முறை என ஏல மையத்தின் செயலர் தினேஷ் பிஹானி கூறியுள்ளார்.இதுகுறித்து தேயிலை தோட்ட அதிபர் ராஜன் லோஹியா கூறுகையில் ,நான் இரண்டு கிலோ மனோகரி கோல்ட் தேயிலை கொண்டு வந்தேன்.
அதில் ஒரு கிலோவை ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.40,000 கொடுத்தேன்.மீதி இருந்த ஒரு கிலோவை100 கிராமை ரூ.8,000 கொடுத்தேன் என கூறினார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…