தனது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த வடமாநில இளஞர்களிடம் 3 மாதமாக வாடகையும் வாங்காமல், இலவசமாக உணவளித்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பியுள்ள காவல் அதிகாரியின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஊர்படை காவல் அதிகாரியாக கடந்த 9 ஆண்டுகளாக வேலை செய்பவர் தான் ரஞ்சித்குமார்.
இவர் தனது வீட்டிலுள்ள 2 அறைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் 2 வருடங்களாக பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் வசித்து வந்துள்ளனர். எதிர்பாராத விதமாக போடப்பட்ட கொரோனா ஊரடங்கால் அவர்கள் வேலையின்றி உணவின்றி இருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக அவர்களிடம் வீட்டு வாடகையும் வாங்காமல், 3 மாதங்களாக உணவளித்து பராமரித்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது, தினக்கூலி செய்து பிழைக்கும் அவர்கள் உணவின்றி கஷ்டப்பட்டதால் என்னால் முடிந்ததை செய்தேன், தனியாக நான் செக்யூரிட்டி நிறுவனமும் நடத்தி வருவதால் உதவி செய்ய இலகுவாயிருந்தது, என் அம்மாவும் முடிந்தவரை சமைத்து தந்தார்கள் என கூறியுள்ளார். காவல் அதிகாரி ரஞ்சித்குமாரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…