பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கி தர மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.
பெங்களூரில், ஹெப்பால் அருகே உள்ள சகரநகரில், 16 வயது இளம்பெண் தனது பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கி தர பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இளம்பெண்ணின் பெற்றோர் தினக்கூலி தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் இருவரும் மாலை வீட்டுக்கு வந்த பின் தான், தனது மகள் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
வேலையை முடித்து வீடு திருப்பிய பெற்றோர் தனது மகளை அழைத்துள்ளனர். ஆனால், அவர்களது அழைப்பிற்கு அப்பெண் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், கதவை உடைத்து கொண்டு அவரது தந்தை உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையறை கூரையில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அப்பெண்ணின் பெற்றோர், அவர் தேர்வில் தோல்வியடைந்ததால் படிப்பை நிறுத்திவிட்டார் என போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், தற்கொலை செய்துகொண்ட பெண் தனது பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்கி கேட்டார். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக அப்பெண்ணுக்கு அவரது பெற்றோர் புத்தாடை வாங்கி கொடுக்கவில்லை.
மேலும், அப்பெண் அவரது தொலைதூர உறவில் உள்ள ஒரு ஆணை விரும்பியதாகவும், இதற்கு இரண்டு குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்தும் அவர் வருத்தப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…