உத்தரபிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபு யூசுப் என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்ததால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். புலனாய்வுப்பிரிவு ஒரு வருடமாக அபு யூசுப் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் இரவில் பைக்கில் சென்ற அபு யூசுப்பை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்து 2 பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அபுயூசுப் வைத்திருந்த 2 வெடிகுண்டுகள் முழுவதும் தயார் நிலையில் இருந்தது.
எனவே அவர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடத்த இருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டு என போலீசார் தெரிவித்தனர். கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணையம் வழியாக அபு யூசுப் தொடர்பில் இருந்துள்ளார். அபு யூசுப்பின் சொந்த ஊருக்கு அழைத்து சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தற்கொலைப்படை ஜாக்கெட் உள்பட வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில், அபுயூசுப் தந்தை கூறுகையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதற்காக நான் வருந்துகிறேன். அவன் மன்னிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் அவன் செயல் தவறானது என கூறினார். அபுயூசுப் மனைவி கூறுகையில், வீட்டில் துப்பாக்கி வெடிமருந்து சேமித்து வைத்துள்ளார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என நான் கூறினேன். ஆனால், நான் அவரை தடுக்க கூடாது என கூறி விட்டார். அவர் மன்னிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அவர்களை வைத்து கொண்டு நான் எங்கு செல்வேன்..? என கூறினார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…