பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் யூ-டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த யூ-டியூப் சேனல் மூலம் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார், அந்த கொலையில் முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சுஷாந்த் சிங் வழக்கில், அவரது காதலியான நடிகை ரியா சக்ரவர்த்தி கனடா செல்ல அக்ஷய் குமார் உதவியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த நான்கு மாதங்களில், சுஷாந்தின் போலி வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றுவதன் மூலம் ரஷீத் ரூ .15 லட்சம் சம்பாதித்துள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் யூடியூபருக்கு எதிராக ரூ .500 கோடிக்கு அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட போலி வீடியோவை யூடியூபர் ரஷீத் சித்திகி பகிர்ந்துள்ளார். அவதூறு வீடியோக்களால் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கம், மன அழுத்தம் போன்றவற்றால் ரூ.500 கோடி அளவுக்கு அக்ஷய் குமார் இழந்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா ஆதித்ய தாக்கரே மற்றும் மும்பை போலீசாருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக ரஷித் சித்திக் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர், இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…