காசோலை மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக கூறி பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நடிகை சரிதா நாயர் கோழிக்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் சிக்கியவர் தான் நடிகை சரிதா நாயர். முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி அவர்கள் மீது பாலியல் புகார் கூறியதன் மூலம் அதிகம் வெளியில் பேசப்பட்டார். இந்த சோலார் மோசடி வழக்கில் சரிதா நாயர் உட்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சரிதா நாயருக்கு விசாரணை கோட் பலமுறை சம்மன் அனுப்பி உள்ளது.
ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார் சரிதாநாயர். இதனை அடுத்து இவருக்கு எதிராக கைது வாரணட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, கோழிக்கோடு போலீசார் திருவனந்தபுரம் வந்து நேற்று காலை சரிதா நாயர் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். அவர் மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து அவரது வர்த்தக பங்குதாரர் பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் டிரைவர் மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…