Categories: இந்தியா

10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்லா மாநகராட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

10 ஆண்டுகளாக பாஜகவிடம் இருந்த, சிம்லா மாநகராட்சியை கைப்பற்றியது காங்கிரஸ். 

ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சிம்லா மாநகராட்சித் தேர்தலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிம்லா மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 34 இடங்களில் 24 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதாவது, சிம்லாவில் 34 வார்டுகளில் 24 இடங்களில் காங்கிரஸ், 9 இடங்களில் பாஜக, ஒரு இடத்தில் மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது.

சிம்லா மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. சிம்லா மாநகராட்சித் தேர்தலி வாக்குப்பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒரு வருட கால தாமதத்திற்கு பிறகு சிம்லா மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. குடிமை அமைப்பின் ஐந்தாண்டு பதவிக்காலம் ஜூன் 2022-இல் முடிவடைந்தது.

ஆனால், வார்டுகளின் எல்லை நிர்ணயத்தை எதிர்த்து நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் தேர்தலை நடத்த முடியவில்லை. இந்த நிலையில், சிம்லா மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் 24 இடங்களில் வெற்றி பெற்று, பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனிடையே, 68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேசக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில், பாஜக வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த நிலையில்,10 ஆண்டுகளாக பாஜகவிடம் இருந்த, ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லா மாநகராட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago