மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் என சரத்பவார் கூறியுள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியினருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் சந்தித்து பேச உள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக – சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜக 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
பாஜக 105 இடங்களிலும் , சிவசேனா கட்சி 56 இடங்களிலும் ,மற்றும் தேசியவாத கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.கூட்டணிக்கட்சிகளான சிவசேனா மற்றும் பாஜக இடையே ஆட்சி பங்கீட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
வாக்குறுதியை காப்பாற்ற தவறினால் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதில் அர்த்தமில்லை என சிவசேனா கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…