Categories: இந்தியா

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ..!

Published by
அகில் R

மத்திய பட்ஜெட் 2024 : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றி வந்த நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியீட்டு வந்தார். கடந்த நிதியாண்டில் ரூ.1.26 கோடி வேளாண் துறைக்கு அறிவித்த நிலையில், நடப்பு நிதியாண்டில் முக்கிய அறிவிப்பாக வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.

இந்த நிதியாண்டில் 2024-25 பட்ஜெட்டில் 0.27 % சதவிகிதம் அதிகரித்து ரூ.1.52 லட்சம் கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை விவசாயம் செய்வதற்கு ரூ.1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. அதே போல வேளாண் துறையில் டிஜிட்டல் மயமாகபுகுத்தப்படும் எனவும் டிஜிட்டல் முறையில் வேளான் பொருட்கள் தொடர்பான சர்வே எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல பருவநிலை மாற்றத்தால் எந்த பாதிக்கப்படாத வகையில் 152 வகை பயிர்களை நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் எனவும் பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண் திட்டம் இன்னும் 5 ஆண்டுக்கு நீடிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி ‘கிசான் கிரெடிட் கார்டுகள்’ வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு 5 மாநிலங்களில் அமல்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

3 minutes ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

28 minutes ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

55 minutes ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago