உ.பி யில் தாயை இழந்த சோகத்தை மறைத்து கடமையை ஆற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பிரபாத் யாதவ் என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் தாயின் இறப்பு சோகத்தை மறைத்து 15 கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். உத்திரபிரதேசம் ஆக்ராவில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்க்கும் பிரபாத் 10 நாட்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது அவரது குடும்பத்தார் தாய் இறந்துவிட்டதாக செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
இருப்பினும் அவர் தன் தாய்க்கு ஆற்றும் கடமையைவிட தான் செய்து கொண்டிருக்கும் பணி மிகவும் முக்கியமானது என்று உணர்ந்து கடமை தவறாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் 15 நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பிறகு 200 கி.மீட்டருக்கு அப்பால் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும் தனது தாய்க்கு இறுதி சடங்குகளை முடித்துவிட்டு மறுநாளே வேலைக்கு திரும்பியுள்ளார். கடந்த வருடம் கொரோனா தொற்றால் தனது தந்தையையும் இழந்த பிரபாத் மறுநாளே வேலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி அவரிடம் கேட்கையில், பிரபாத் எனது தாய் இறந்தததை கேட்டு அதிர்ந்தேன், இருப்பினும் எனது உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு வேலையை செய்தேன். நான் செய்யும் பணியை என்னால் கைவிட முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…