உ.பி-யில் இறந்த பெண்ணின் சடலத்தை மருத்துவமனை வார்டுக்கு வெளியே விட்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்.!

Published by
Ragi

உத்திரப்பிரதேசத்தில் இறந்த பெண்ணின் சடலத்தை மருத்துவமனை வார்டுக்கு வெளியே விட்டு சென்றதால் ,உடலை கைவண்டி உபயோகித்து கொண்டு சென்றுள்ளனர் .

உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் நகரில் உள்ள கான்ஷிராம் காலனியில் வசிக்கும் நசீம் என்ற பெண்ணிற்கு செவ்வாயன்று மார்பு வலி ஏற்பட்டுள்ளது.உடனடியாக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் .

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸின் உள் இருந்த அவசர மருத்துவ அதிகாரியான டாக்டர் அகிலேஷ் குமாரிடம் பெண்ணை பரிசோதிக்குமாறு குடும்பத்தினர் கேட்டு கொண்டனர் .அதனை தொடர்ந்து பரிசோதித்த மருத்துவர் பெண் இறந்து விட்டதாக அறிவித்துள்ளார் . உடனடியாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பெண்ணின் சடலத்தை மருத்துவமனையின் வார்டுக்கு வெளியே விட்டு விட்டு,அவரது குடும்பத்தினரிடம் வேறோரு வாகனத்தை எடுக்க கூறியுள்ளார் .

இதனை தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் சடலத்தை கை வண்டி உபயோகித்து கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது . இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து நடைபெற்று விசாரணையில் ஆம்புலன்ஸ் டிரைவர் அலட்சியம் காட்டியதும் , வார்டுக்கு வெளியே விட்டு சென்றதும் தெரிய வந்தது . அதன் பின் ஆம்புலன்ஸை இயக்கும் அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது மட்டுமில்லாமல் தொடர் விசாரணையையும் நடைபெற்று வருகிறது.இதுகுறித்து மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி கூறுகையில், இறந்த பெண்ணின் குடும்பத்தினர் சடலத்தை கொண்டு செல்வதற்காக வாகனத்தை மருத்துவமனையிடம் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 minutes ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

41 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

6 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago