11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்..!

Published by
லீனா

பீகாரில் 11 முறை கொரோனா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்.

பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்தின் ஓரய் எனும் கிராமத்தை சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 முதியவர் ஓய்வுபெற்ற தபால் துறை ஊழியர் ஆவார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 13 அன்று முதல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து, டிசம்பர் 30-ஆம் தேதி வரை 11 முறை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். 12-ஆம் தவணை தடுப்பூசி செலுத்த வந்த போது அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தடுப்பூசி செலுத்தி கொள்வது தனக்கு நல்ல பலனைத் தருவதாகவும், அதனால், தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதாகவும், ஒவ்வொரு முறையும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேதியை குறித்து வைத்திருப்பதாகவும், அரசு அற்புதமான தடுப்பூசி உற்பத்தி செய்து இருக்கிறது, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர் எட்டு முறை தனது ஆதார் கார்டு, மொபைல் எண்ணை சமர்ப்பித்து தடுப்பு செலுத்தி கொண்டதாகும், மனைவியின் வாக்காளர் அடையாள அட்டை, அவருடைய மொபைல் எண்ணை குறிப்பிட்டு மூன்று முறை பல்வேறு இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், முதியவரின் இந்த செயல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

26 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

52 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

2 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago