Categories: இந்தியா

ஆந்திராவில் ஒரு அம்மா உணவகம்.. முதல்வர் சந்திரபாபு நாயுடு மறு தொடக்கம்.!

Published by
கெளதம்

விஜயவாடா : ஆந்திரா மாநிலம் குடிவாடாவில் சுதந்திர தினத்தையொட்டி, அண்ணா கேன்டீனை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் போலவே, ஆந்திரா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் பெயரில் “அண்ணா கேண்டீன்” எனும் மலிவு விலை உணவகத் திட்டத்தை அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மறு தொடக்கம் செய்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், இந்த வாரம் முதல் கட்டமாக 100 அண்ணா உணவகங்கள் தொடங்கப்பட உள்ளது. கேன்டீனை திறந்து வைத்துவிட்டு, சந்திரபாபு மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி அண்ணா கேன்டீனில் காலை உணவை அருந்தினர்.

இந்த திறப்பு விழா முதலில், வடக்கு ஆந்திராவில் நடத்துவதற்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமீட்டு இருந்தார். ஆனால், எம்எல்சி தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால்,இத்திட்ட தொடக்க விழா நிகழ்வு கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா என மாற்றப்பட்டது.

மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த கேன்டீன்களில் தர சோதனை நடத்தவும், சுகாதாரம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கேன்டீனில் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவை வழங்கப்படும்.

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஒவ்வொன்றும் 5 ரூபாய்க்கு கிடைக்கும். 15 ரூபாய்க்கு, இந்த கேன்டீன்களில் ஒரு நபர் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடலாம். ஒய்ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும், தெலுங்கு தேசம் அரசு தொடங்கிய அண்ணா கேன்டீன்களை அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூடிவிட்டார்.

இதனை தொடர்ந்து அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெரும் வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு கடந்த ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் அண்ணா கேண்டீன் திட்டமும் ஒன்று. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் மாநிலம் முழுவதும் அப்போது 203 கேன்டீன்கள் அமைக்கப்பட்டது.

தற்போது, ஆளும் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்கள் தொகுதிகளில் புதியதாக அமைக்கப்பட உள்ள அண்ணா கேன்டீன்களை திறந்து வைப்பார்கள். வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் எம்எல்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மட்டும் அண்ணா கேன்டீன் திறப்பு விழா அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

2 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

3 hours ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

4 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

5 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago