கோவாக்சின் 3-ஆம் கட்ட பரிசோதனை நிறைவு – பாரத் பயோடெக் அறிவிப்பு

Announcing successful completion of volunteer enrolment for Phase-3 Clinical trials of Bharat Biotech COVAXIN

கோவாக்சின் 3-ஆம் கட்ட பரிசோதனை நிறைவு பெற்றுள்ளதாக  பாரத் பயோடெக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.ஆகவே நாடு முழுவதும் வரும் 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் கோவாக்சின் 3-ஆம் கட்ட பரிசோதனை நிறைவு பெற்றுள்ளதாக  பாரத் பயோடெக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.25,800 தன்னார்வர்களுக்கான சோதனை நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.