Categories: இந்தியா

10,000 கோடி ரூபாய் அளவிலான பொருட்கள் பறிமுதல்.! தேர்தல் ஆணையம் தகவல்.!

Published by
மணிகண்டன்

டெல்லி: மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் (ஜூன் 1) நிறைவுற்றதை அடுத்து, நாளை (ஜூன் 4) ஒரே நாளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் நாளை வரையில் தேர்தல் விதிமுறைகள் இந்தியா முழுக்க அமலில் உள்ளது.

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்ல கூடாது. மற்ற பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு மது போன்ற போதை பொருட்கள் அளிப்பதற்கான தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்த நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் விதிகள் அமலில் இருந்த போது 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், பரிசு பொருட்கள், இலவசங்கள், ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்த தேர்தல் கண்காணிப்பில் 68 ஆயிரம் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும், 1.5 கோடி பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர் என்றும் ராஜீவ் குமார் கூறினார்.

மேலும், தேர்தல் ஆணையம் மீது சிலர் அவநம்பிக்கை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் காணவில்லை என்ற மீம்ஸ்களை நாங்கள் பார்த்தோம். நாங்கள் எங்கும் போகவில்லை இங்கு தான் இருக்கிறோம். இந்த தேர்தலில் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம், கோடை காலத்துக்கு முன்னர் தேர்தல் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பது நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்றும் தேர்தல் தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

8 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

9 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

10 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

10 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

11 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

11 hours ago