டெல்லி: மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் (ஜூன் 1) நிறைவுற்றதை அடுத்து, நாளை (ஜூன் 4) ஒரே நாளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் நாளை வரையில் தேர்தல் விதிமுறைகள் இந்தியா முழுக்க அமலில் உள்ளது.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்ல கூடாது. மற்ற பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு மது போன்ற போதை பொருட்கள் அளிப்பதற்கான தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்த நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் விதிகள் அமலில் இருந்த போது 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், பரிசு பொருட்கள், இலவசங்கள், ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்த தேர்தல் கண்காணிப்பில் 68 ஆயிரம் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும், 1.5 கோடி பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர் என்றும் ராஜீவ் குமார் கூறினார்.
மேலும், தேர்தல் ஆணையம் மீது சிலர் அவநம்பிக்கை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் காணவில்லை என்ற மீம்ஸ்களை நாங்கள் பார்த்தோம். நாங்கள் எங்கும் போகவில்லை இங்கு தான் இருக்கிறோம். இந்த தேர்தலில் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம், கோடை காலத்துக்கு முன்னர் தேர்தல் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பது நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்றும் தேர்தல் தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்தார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…