அசாமில் கொரோனா சோதனையைத் தவிர்ப்பதற்காக ஜாகிரோட் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் தப்பி ஓட்டம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
ஆனால் இதனை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத மக்கள் பலர் இன்னும் பயந்து எந்த வித பரிசோதனையோ அல்லது தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கோ முன் வர மறுக்கின்றனர்.
இதனையடுத்து திங்கள்கிழமை (மே 24) அசாம் மாநிலத்தில் குவஹாத்தி நகரில் கொரோனா சோதனையிலிருந்து தப்பிக்க ரயில் நிலையத்திலிருந்து மக்கள் தப்பி ஓடிய வீடியோ பதிவு சமூக வளைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் குவஹாத்தி நகரில் உள்ள ஜாகிரோட் ரயில் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 500 பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு பயந்து தப்பி ஓடியுள்ளனர். அதாவது கன்னியாகுமரி-திப்ருகார் விவேக் எக்ஸ்பிரஸிலிருந்து இறங்கிய பயணிகளின் பெரிய கூட்டம் கொரோனா சோதனைக்கு பயந்து ரயில் நிலையத்திலிருந்து தப்பி ஓடியது.
மேலும் அதிகாரிகள் முயற்சித்து கிட்டத்தட்ட 170 பேரைக் கண்டுபிடித்தனர் அவர்களை பரிசோதித்ததில் 14 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டது.
அதில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.அதன்பின் போலிசார் அரசின் கொரேனா வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஜாகிரோட் காவல் நிலையத்தில் ஐபிசி மற்றும் அசாம் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…