Ayodhya Ram Temple [Image Source : Scroll.in]
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறுகையில், 2024 ஜனவரி 14ம் தேதி மகா சங்கராந்தி அன்று கோயில் திறப்பு விழா நடைபெறும்.
தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கும், இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார். மொத்த விழாவையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்தார்.
கோவில் கட்டிடக்கலை நாகரா பாணியில் உள்ளது. இதில் 46 தேக்கு மர கதவுகள் இருக்கும். கருவறையின் கதவு தங்கத்தால் ஆனதாக இருக்கும். ‘கோவில் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு நிற்கும்’ என கட்டுமானக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவில் மூன்று ஏக்கரில் கட்டப்படும் அதே வேளையில், 9 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட வளாகத்தை சுற்றி ஒரு சுற்றுச்சுவர் அமைக்கப்படும். சுவரில் ராமாயணத்தை விளக்கும் சிற்பங்கள் போரடிக்கப்பட்டிருக்கும். கோவிலின் மூன்று வாயில்களும் கோபுரமும் தங்க முலாம் பூசப்பட்டிருக்கும்.
இந்த கோயில் வளாகத்தில் யாத்திரை வசதி மையம், அருங்காட்சியகம், காப்பகங்கள், ஆராய்ச்சி மையம், ஆடிட்டோரியம், கால்நடைக் கொட்டகை, சடங்குகளுக்கான தளம், நிர்வாகக் கட்டிடங்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கான தங்குமிடம் ஆகியவை அமைகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…