பெங்களூருவில் இருந்து சோலாப்பூருக்கு “RORO” ரெயில் சேவையை முதல்வர் எடியூரப்பா இன்று தொடங்கி வைத்தார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று காலை காணொளி காட்சி மூலம் பெங்களூரிலிருந்து சோலாப்பூருக்கு செல்லும் “ரோல் ஆன் ரோல் ஆஃப்” என்ற (ரோரோ) ரயில் சேவையை தொடங்கிவைத்தார். இந்த ரயில் தர்மவரம், குண்டகல், ரைச்சூர் மற்றும் வாடி வழியாக 682 கி.மீ தூரத்தை மகாராஷ்டிராவின் சோலாப்பூர் அருகே சென்று அடைகிறது.
ஏப்ரல் மாதத்தில் பெங்களூரு மற்றும் சோலாப்பூர் இடையே சரக்கு லாரிகளின் போக்குவரத்து குறித்து ஆய்வு செய்த பின்னர் ரோரோ ரயில்களின் சோதனை சேவை அறிமுகப்படுத்தப்பட்டதாக ரயில்வே மாநில அமைச்சர் சுரேஷ் அங்கடி தெரிவித்தார்.
இது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. தாற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமில்லாமல் ரோரோ ரயில்களை இயக்குவதன் மூலம் பொருட்களை இறக்குமதி செய்ய மற்றும் ஏற்றுமதி செய்ய உதவும்.
இந்நிலையில் ரோரோ ரயில்களை அறிமுகப்படுத்துவது சாலை போக்குவரத்து மற்றும் எரிபொருள் நுகர்வு ஆகியவற்றைக் குறைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும், “ரோரோ” ரயில்களில் சரக்கு லாரிகளை ஏற்றிச் செல்வது ஆகும். அந்தந்த லாரிகள் பயணிக்க வேண்டிய குறிப்பிட்ட ரெயில் நிலையம் வந்த உடன் லாரிகள் இறக்கி விடப்படுகிறது.
மேலும், இந்த புதிய ரயில் சேவை பெங்களூரிலிருந்து தொழில்துறை மற்றும் விவசாய பொருட்களை கொண்டு செல்லவும், மகாராஷ்டிராவிலிருந்து வெங்காயம், பருப்பு வகைகள் மற்றும் பிற பொருட்களைப் பெறவும் உதவும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…