ஜாக்கிரதை: இதை செய்தால் 2 ஆண்டு சிறை.,ரூ.10 லட்சம் அபராதம் – CCPA எச்சரிக்கை.!

Published by
பாலா கலியமூர்த்தி

விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாமல் விளம்பரங்கள் செய்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என CCPA எச்சரிக்கை.

விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாமல் கொரோனாவிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதில் தயாரிப்புகளின் செயல்திறனைக் கோரும் விளம்பரதாரர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, இதுகுறித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) கூறுகையில், தற்போதைய கொரோனா தொற்றுநோயைப் பயன்படுத்திக் கொண்டு தயாரிப்புகளுக்காக நுகர்வோரை தவறாக வழிநடத்த தவறான விளம்பரங்கள் கூறப்படுகின்றன. தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்க தவறான நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக கையாளுகிறார்கள்.

இதையயடுத்து தற்போது விளம்பரங்கள் அதிகரித்துள்ளது அதுவும் குறிப்பாக உணவுப் பொருட்கள் தொடர்பானவை ஆகும். இதை சாப்பிட்டால் 100% அல்லது 99.9% கிருமிகளைக் கொல்லும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. கடந்த 2020 ஜனவரி மற்றும் ஜூலை மாதத்திற்கு இடையில், கை சுத்திகரிப்பாளர்களுக்கான தொலைக்காட்சி விளம்பரம் கிட்டத்தட்ட 100% அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக, 2020-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த விளம்பர அளவிலிருந்து, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் சுகாதார தயாரிப்புகளுக்காக 20% தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாகியுள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில், அத்தகைய விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாமல் (scientific proof) தவறான விளம்பரங்கள் செய்தால் விளம்பரதாரர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று CCPA எச்சரிக்கை விடுத்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…

25 minutes ago

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

13 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

14 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

14 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

15 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

16 hours ago