மோடியின் நண்பர் அதானியின் மெகா சைஸ் ஊழல்… ராகுல் காந்தி கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

சென்னை: பாஜக ஆட்சியில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது- ராகுல் காந்தி.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மேடை பேச்சுக்களில் மட்டுமல்லாது டிவி நேர்காணல்கள், சமூக வலைதளங்கள் மூலமும் அரசியல் தலைவர்களின் பிரச்சாரமும், மற்ற கட்சிகள் மீதான விமர்சனங்களும் அனல் பறக்கின்றன. ஏற்கனவே, பிரதமர் மோடி முன்னர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு அதானி, அம்பானி டெம்போவில் பணம் அனுப்புகின்றனர் என கடுமையாக விமர்சித்தார்.

தற்போது அதேபோல, காங்கிரஸ் கட்சி இளம் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஓர் பதிவை இட்டுள்ளார். அதில், நிலக்கரியை அதானி விற்பனை செய்ததில் மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்ற தலைப்பில் வெளியான செய்தி புகைப்படத்தை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளார்.

அதற்கு கிழே, பல வருடங்களாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் பிரதமர் மோடியின் அபிமான நண்பன் அதானி மூன்று மடங்கு விலைக்கு குறைந்த தர நிலக்கரியை விற்று பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளார் என தரவுகள் வெளியாகியுள்ளன.

இந்த மோசடி குறித்து, அமலாக்கத்துறை, CBI மற்றும் வருமானவரித்துறை விசாரிக்காமல் அமைதியாக இருக்க காரணம் என்ன.? இதனை மறைக்க எத்தனை டெம்போக்கள் (டெம்போவில் பணம்) பயன்படுத்தப்பட்டன பிரதமர் மோடி கூறுவாரா.? ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு, இந்த மெகா ஊழலை I.N.D.I.A  அரசு விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கை கூறும் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

23 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago