கொரோனாவால் பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் காலமானார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த கொரோனா தொற்றால் பல அரசியல் தலைவர்களும் உயிரிழந்துள்ளதும், சிலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பீகாரின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான சுனில் குமார் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் காலமானார்.
66 வயதான சுனில் சிங் கடந்த ஜூலை 13-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், இவர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகள் மற்றும் மனைவி உள்ளனர். தற்போது முதலமைச்சர் நிதிஷ்குமார், அவரது துணை அமைச்சர் சுஷில் குமார் மோடி, பீகார் சட்டமன்ற கவுன்சில் செயல் தலைவர் அவதேஷ் நாராயண் சிங் மற்றும் பல தலைவர்கள் சுனில் சிங்கின் மரணத்திற்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து சட்டமன்ற சபை செயல் தலைவர் உட்பட பீகாரின் 6 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீகாரில் கொரோனாவால் இறந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…