கொரோனாவால் உயிரிழந்த பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர்.!

Published by
Ragi

கொரோனாவால் பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் காலமானார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலு‌ம், இந்த கொரோனா தொற்றால் பல அரசியல் தலைவர்களும் உயிரிழந்துள்ளதும், சிலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பீகாரின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான சுனில் குமார் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் காலமானார்.

66 வயதான சுனில் சிங் கடந்த ஜூலை 13-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், இவர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகள் மற்றும் மனைவி உள்ளனர். தற்போது முதலமைச்சர் நிதிஷ்குமார், அவரது துணை அமைச்சர் சுஷில் குமார் மோடி, பீகார் சட்டமன்ற கவுன்சில் செயல் தலைவர் அவதேஷ் நாராயண் சிங் மற்றும் பல தலைவர்கள் சுனில் சிங்கின் மரணத்திற்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து சட்டமன்ற சபை செயல் தலைவர் உட்பட பீகாரின் 6 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீகாரில் கொரோனாவால் இறந்த முதல் சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

35 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago