மத்தியப்பிரதேசத்தில் பாஜக 100 தொகுதிகள் வித்தியாசத்தில் முன்னிலை ..!

Published by
murugan

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த  மாநிலத்தில்  உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உட்பட 2,533 வேட்பாளர்களாக  உள்ளனர். சிவராஜ் சிங் சவுகான், தனது கட்சி ‘பெரும்பான்மையுடன்’ ஆட்சியை தக்கவைக்கும் என்று கூறியுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அம்மாநில வாக்காளர்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பாஜக 165 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 62 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது தவிர மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் 3 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இந்தப் போக்குகளைப் பார்த்தால், மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியிலும், கமல்நாத் சிந்த்வாரா தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

இருப்பினும், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஜோதிராதித்ய சிந்தியா தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவாக உள்ளது.  இந்த நிலையில் சட்டசபை தேர்தல்  முடிவு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

 

 

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

4 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

4 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

5 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

6 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

7 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

7 hours ago