ஜம்மு காஷ்மீர் ப.ஜா.க தலைவர் ஷேக் வாசிம், அவரது சகோதரர் மற்றும் தந்தை ஆகியோர் தீவிர வாதிகளால் சுட்டு கொள்ளப்பட்டது தொடர்பாக பாதுகாப்புக்கு நியமிக்க பட்டிருந்த காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பந்திப்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த பாஜக தலைவராகிய ஷேக் வாசிம், அவரது சகோதரர் மற்றும் அவரது தந்தை ஆகிய மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த பொழுது உள்ளூர் காவல் நிலையம் அருகில் ஒரு கடையின் வாசலில் இவர்கள் அமர்ந்து இருந்ததாகவும், காயமுற்ற மூவரையும் காவல்துறையினர் தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல் அறிந்ததும் இந்திய பிரதமர் மோடி நள்ளிரவில் அவரது நிலைமை குறித்து விசாரித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார். இந்நிலையில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பாதுகாப்புப் படையினரின் தோல்வியையே சுட்டிக்காட்டுகிறது எனவும், தாக்குதல் நடந்த பொழுது பாதுகாப்பு படையினர் யாருமே அங்கு இல்லை எனவும் உறுதியாகியுள்ளது.ஷேக் வாசிம்க்கு 8 வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்துள்ளனர். இதுகுறித்து அந்த பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்த காஷ்மீர் டிஜிபி விஜயகுமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…