கடந்த முறை நடத்த வன்முறை பாஜகவின் சோதனை முயற்சி.! முதல்வர் அசோக் கெலாட் கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

ஜாதி – மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த பாஜக திட்டம் தீட்டுகிறது. என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் விமர்சனம் செய்துள்ளார். 

மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவது தான் பாஜகவின் திட்டம் எனவும், அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த மாதம் ராஜஸ்தான், கரௌலியில் நடந்த வன்முறை சம்பவமானது பாஜகவின் சோதனை முயற்சி என்றும் முதல்வர் விமர்சித்தார்.

கடந்த, ஏப்ரல் 2 ஆம் தேதி கரௌலியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக இந்து அமைப்புகளால் பைக் பேரணி நடத்தப்பட்டது. அப்போது, ஒரு சிலர் கற்களை வீசியதால் மதக்கலவர பதற்றம் ஏற்பட்டது. கரௌலியில் நடந்தது பாஜகவின் சோதனை முயற்சி தான் அதனை, நாங்கள் கட்டுப்படுத்தினோம் என முதல்வர் குறிப்பிட்டார்.

ராம நவமி (மார்ச் 30 ) அன்று ஏழு மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்று அசோக் கெலாட்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வன்முறைக்கு வன்முறை பதில் அல்ல, “இந்த நாட்டை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக முடிவு செய்துள்ளன எனவும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டில், வன்முறை மற்றும் அமைதியின்மை ஏற்படும் போது, அது வளர்ச்சியையும், ஆட்சியையும் வெகுவாக பாதிக்கும். என்றார்.

ராஜ்கரில் உள்ள 35 கவுன்சிலர்களில் 34 பேர் பாஜகவினர். அவர்கள் அங்கு பிரேரணையை உண்டாக்கி, கோயிலை இடித்தார்கள். அவர்கள் காங்கிரஸ் ஆட்சியினை சீர்குலைக்கவும், அவதூறு செய்யவும் மட்டுமேஇதில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் உண்மையை ஆதரிக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் (பாஜக) பாடம் கற்றுக்கொள்வார்கள் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago