விநாயகர் சதூர்த்தி விழா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது…!

Published by
Rebekal

ஆந்திர பிரதேசத்தில் விநாயகர் சதூர்த்தி விழா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் கொரோனா பரவல் தற்பொழுது குறைந்து உள்ளது. இருப்பினும், கொரோனா 3 ஆம் அலை பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் விழாக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூட கூடிய இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி விநாயக சதுர்த்தி விழாவின் பொழுது, பொது மக்கள் அதிகமாக கூட கூடாது எனவும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அது போல ஆந்திர பிரதேச மாநிலத்திலும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆந்திர மாநிலத்தின் பாஜக தலைவர் சோமு வீராஜு மற்றும் மாநில பொதுச் செயலாளர் விஷ்ணு வர்தன் ஆகியோர் மற்ற கட்சி தலைவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே மத்திய அரசின் கட்டுப்பாடுகளின் படி தான் ஆந்திர மாநிலத்தில் விநாயக சதுர்த்தி விழாவிற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் முடிவை அரசியல் ஆக்குவதற்காக மாநில பாஜக தலைவர்கள் இவ்வாறு போராட்டங்கள் நடத்துவதாகவும், மேலும் இந்த பிரச்சினையை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை எனவும் ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago