நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.நித்தியானந்தாவிற்கு குஜராத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அதன் விசாரணையம் நடைபெற்று வருகிறது. இந்த வேளையில் தான் நித்தியானந்தா சார்பாக புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணம் செய்யப்பட்டது.ஆனால் இவரது விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது.ஆனால் இது ஒரு புறம் இருக்க தினமும் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா.குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைலாச என்ற தனி நாட்டை உருவாக்குவதாக அறிவித்தார் நித்தியானந்தா.இது ஒரு பெரும் விவாதமாக வெடித்தது.
ஆனால் கர்நாடகாவில் நித்தியானந்தாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வகையில் நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க சர்வதேச காவல்துறையான இன்டர்போலிடம் குஜாரத் காவல்த்துறை கோரிக்கை வைத்தது.இந்த கோரிக்கையை ஏற்று சர்வதேச காவல்துறையா ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.தலைமறைவாக உள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களை கண்டறிய, புளு கார்னர் நோட்டீஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…