நேற்று ஒன்பது பேருடன் குஜராத் கடற்கரைக்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசார் மற்றும் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளது. இந்த படகில் இருந்த ஒன்பது பேருடன் படகில் போதை பொருட்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக கூறியுள்ள கடலோர காவல்படையினர், அந்த படகை இந்திய கடல் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்ததாகவும், அதில் பல போதைப்பொருட்கள் இருந்ததாகவும், அவர்கள் அதை கடலில் வீசிவிட்டு பாகிஸ்தானுக்கு திரும்ப முயன்றபோது அவை அனைத்தும் கைப்பற்றப்பட்டு அவர்களும் பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து வந்த படகு அதிவேகமாகச் செல்லக் கூடியதாக இருந்ததால் அவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி இருந்ததாகவும், இந்த துப்பாக்கி சூட்டில் படகில் இருந்த ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…