மே-19 ஆம் தேதி மும்பையில் இருந்து துபாய்க்கு 360 இருக்கைகள் கொண்ட போயிங் 777 ரக விமானத்தில், பாவேஸ் ஜாவேரி (40) என்ற ஒருவர் மட்டும் பயணித்துள்ளார்.
மே-19 ஆம் தேதி மும்பையில் இருந்து துபாய்க்கு 360 இருக்கைகள் கொண்ட போயிங் 777 ரக விமானம் ஒன்று ஒற்றை பயணியுடன் பயணித்துள்ளது. அந்த விமானத்தில் பாவேஸ் ஜாவேரி (40) என்ற ஒருவர் பயணித்துள்ளா.ர் இவர் இந்த விமானத்தில் பயணம் செய்ய பயணம் கட்டணமாக 18 ஆயிரம் மட்டுமே செலுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக துபாயில் சில பயண கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி துபாயை சேர்ந்தவர்கள் அல்லது அந்நாட்டின் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரமுடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மே 19-ஆம் தேதியன்று பல பயணிகளுக்கு துபாய்க்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாவேஸ் ஜாவேரி என்ற பயணிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு காரணம் என்னவென்றால், துபாயை பொறுத்தவரையில் தனது நாட்டின் சிறந்த முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாக கூடிய கௌரவ கோல்டன் விசாக்கள் வழங்கப்படுகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கவுரவமாக நடத்தப்படுகின்றனர். பாவேஸ் இந்த கோல்டன் விசா வைத்துள்ளதால் அவருக்கு பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…