இன்று முதல் ரயில் நிலைய கவுன்டர்களில் முன்பதிவு நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்பட உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.
இந்த ரயிலுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்காக முன்பதிவு நேற்று காலை 10 மணி முதல் IRCTC மற்றும் செல்போன் செயலி மூலம் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் ரயில் நிலைய கவுன்டர்களில் முன்பதிவு நடைபெறும் என நேற்று மத்திய ரயில்வே துறை அறிவித்தது.
முன்பதிவு செய்யும்போது பயணிகள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று வாங்க அறிவுறுத்தபட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் ரயில் நிலைய கவுன்டர்களில் முன்பதிவு நடைபெறவுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…