மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 32 வயது நபர் தனது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் 32 வயதுடைய வர்கீட் எனும் நபர் தனது காதலிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் பின்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்ட தகவலின்படி, இந்த வர்கீட் எனும் நபர் ஒரு பெண்மணியை காதலித்து வந்ததாகவும், இவர் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்ததாகவும் கூறி உள்ளனர்.
ஆனால், அண்மையில் இவரது காதலிக்கு வேறு ஒரு நபருடன் பெற்றோர் திருமணத்தை நிச்சயித்ததன் காரணமாக, மனம் சோர்வடைந்து ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு படிக்கட்டிலிருந்தபடி துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா அல்லது இது கொலையா என்பது குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…