சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்தார் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது, கொரோனா தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில் அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். ஜூலை.15க்குள் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…